
ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில் தினமும் 20 லிட்டர் பால் கறப்பதாக கூறப்படுகிறது. அதாவது காலையில் 11 லிட்டர் பாலும், மாலையில் 9 லிட்டர் பாலும் கறப்பதாக விவசாயி கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் தாடே பள்ளிக்கூடம் என்ற பகுதியில் உள்நாட்டு பசும்பால் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கலந்து கொண்ட பசு ஒன்று தினமும் 5 லிட்டர் பால் கறப்பதாக சாதனை படைத்தது. இந்நிலையில் 20 லிட்டர் பால் கறக்கும் இந்த பசு கிராம மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயி கூறும் போது, நல்ல தீவனம் மற்றும் முறையான பராமரிப்பு போன்றவற்றால் தான் மாடு அதிக அளவில் பால் தருகிறது என்று கூறினார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.