இந்தியாவின் இளம் நட்சத்திரமான வைபவ் சூரியவன்சி 15 வயதில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தினால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவர் விரைவில் இந்திய அணியில் தேர்வாக இருக்கிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தற்போது குட்மார்னிங் கியூட்டி என்ற தலைப்பில் வைபவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பேருந்தில் இருந்தபடியே ஜன்னல் வழியாக வைபவ் யாரையோ பார்த்து துப்பாக்கியால் சுட்டு கண்ணடித்து விளையாடுவது போல் இருக்கிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.