
ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறியது.
இந்நிலையில் அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025க்கான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற உள்ளது. அந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வாங்கும் அணிக்கு ரூபாய் 30.78 கோடியும், தோல்வி அடைந்த அணிக்கு ரூபாய் 18.46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கலந்து கொண்ட மீதமுள்ள 7 அணிகளுக்கும் புள்ளி விபரப்பட்டியல் படி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புள்ளி விவரப்பட்டியல், 3ஆவதாக இடம்பிடித்த இந்திய அணிக்கு ரூபாய் 12.33 கோடி பரிசு தொகையும், 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கு ரூபாய் 10.28 கோடியும், 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு ரூபாய் 8.22 கோடியும், 6வது இடம் பிடித்த இலங்கை அணிக்கு ரூபாய் 7.19 கோடியும், 7வது இடம்பிடித்த வங்காளதேச அணிக்கு ரூபாய் 6.17 கோடியும், 8வது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூபாய் 5. 14 கோடியும், கடைசி இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூபாய் 4.11 கோடியும் பரிசு தொகையாக அறிவித்துள்ளது.