மகளிர் டி20 உலக கோப்பை துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அரை இறுதிக்கு கூட செல்லாமல் லீக் சுற்றில் வெளியேறியது. இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் சென்றது. இதில் t20 உலக கோப்பையை நியூசிலாந்து அணி வென்றது.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 19.6 கோடி வழங்கப்பட்டது. இதனை அடுத்து தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு ரூபாய் 9.8 கோடி வழங்கப்பட்டது. இதேபோன்று அரை இறுதியில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய  இரண்டு அணிகளுக்கும் தலா ரூபாய் 4.19 கோடி வழங்கப்பட்டது.

மேலும் இந்தியா, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு தலா ரூபாய் 5.7 கோடியும் வழங்கப்பட்டது. கடைசியாக இலங்கை மற்றும் ஸ்காட்லாந்துக்கு தலா ரூபாய் 1.13 கோடியும் வழங்கப்பட்டது. ஐசிசி கிரிக்கெட் டி20இல்  விளையாடிய  அனைத்து அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கியது.இந்த செய்தி இணையதளத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.