
இங்கிலாந்தில் பீட்டர்-பார்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானில் குடியேறி உள்ளன. இவர்கள் கடந்த 18 வருடங்களாக அங்குள்ள பாபியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆட்சி வருகின்றனர். மேலும் தலிப்பான்கள் 2021ல் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் உள்ளூர் நிர்வாகத்துடன் அனுமதியுடன் இந்த தம்பதியினர் தொடர்ந்து சேவையாற்றி வந்தனர். இதன் மூலம் ஏராளமான பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தலிப்பான்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.