
திருமண அலுவலகம் நம்பி மணமகனைத் தேடிய பெண் ஒருவர், அதே அலுவலகம் நடத்தும் பெண்ணிடம் மோசடிக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சக்ரி பகுதியில் திருமண அலுவலகம் நடத்தி வந்த சித்ரா சவுத்ரி, தனது சொந்த கணவரான சஞ்சய் சவுத்ரியை மணமகனாக அறிமுகப்படுத்தி, மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்திருப்பது நம்பமுடியாத அதிர்ச்சி தகவலாக வெளியாகியுள்ளது.
ஷிவ்ரிநாராயண் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், ஜூலை 2024ல் தனது திருமணத்திற்காக சித்ராவின் திருமண அலுவலகத்தை அணுகியிருந்தார். அப்போது, சித்ரா தனது கணவரின் புகைப்படத்தை “மணமகன்” எனக் காட்டி நம்ப வைத்தார். பின்னர், மத நிலையத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற, அந்தப் பெண் ஒப்புதல் அளித்தார். திருமணத்திற்குப் பிறகு, சஞ்சய் அந்தப் பெண்ணை ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு அழைத்துச் சென்று, அங்கு 11 மாதங்கள் வாழ்ந்தார்.
அதன் பிறகு, கணவரின் நடத்தை மற்றும் தொலைபேசி தொடர்புகள் குறித்து சந்தேகம் ஏற்பட்ட பெண், சஞ்சயின் மொபைலை சோதித்தபோது உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்துக்குவந்தன. அதற்கிடையில், சித்ராவும் சஞ்சயும் அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததையடுத்து, சக்ரி போலீசார் சித்ரா சவுத்ரி மற்றும் சஞ்சய் சவுத்ரியை கைது செய்துள்ளனர். திருமண நம்பிக்கையை தொழிலாக்கி மோசடி செய்த இந்த சம்பவம், திருமண ஆலையங்களைப் பற்றிய நம்பிக்கையில் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. போலீசார் இதற்கான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.