பணபரிமாற்றம் போன்ற சட்டத்திற்கு விரோதமான வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து 471 நாள் சிறை வாசகத்திற்கு பிறகு, ஜாமீனில் வெளியே வந்தார். சிறையை விட்டு வெளியே வந்த அடுத்த நாளே, அவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் தான் இல்லை என்பதை கூறி ஜாமீனை பெற்ற அவர் அடுத்த நாளே அமைச்சராக பதவியேற்று உள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுதாரர் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், முன்னதாக வழக்கு தொடர்பாக வந்த தடவியல் நிபுணர் தற்போது வரவில்லை.

தற்போது அவர் அமைச்சராக இருப்பதால்தான் பயத்தில் வர மறுக்கிறார். எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம் என்று அமலாக்குத்துறை தரப்பில் வாதிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள் அமைச்சராவதில் அவருக்கு என்ன அவசரம்? அவர் அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு சொல்லுங்கள். அமைச்சராக தொடர்வதா? இல்லையா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி அமைச்சராக தொடர விரும்பினால் முன்னுரிமை கொடுத்து விசாரிக்கலாம். கடந்த முறையே நாங்கள் அதிருப்தி தெரிவித்திருந்தோம் என்று கூறி வழக்கை மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.