
பிரபல யூடியூபர் இர்பான் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. உணவுகளை ரிவ்யூ செய்யும் இவர் தற்போது பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரையும் தேடி பேட்டி எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவர் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று கூறி, அவர்களுக்கு உடைகள் வாங்கிக் கொண்டு தனது மனைவியுடன் சேர்ந்து சென்னையில் உள்ள பல இடங்களுக்கு சென்று கொடுத்துள்ளார்.
அப்போது இவர்கள் காரில் இருந்தபடியே உடைகளை கொடுத்துள்ளனர். அப்போது சிலர் தனது கைகளை காருக்குள் நீட்டி உள்ளனர். இதை பார்த்த இர்ஃபான் காருக்குள் கைகளை விடாதீர்கள் என்று காட்டமாக கூறியுள்ளார். அது மட்டும் இன்றி, உதவி பொருளை வாங்கும் போது சிலர் அவரது மனைவியை தொட்டு விட்டார்கள் என்றும், அவரது கைகளை பிடித்து இழுத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பலரும் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் உதவி செய்ய சென்ற இடத்தில் அப்படி நடந்து இருக்க கூடாது. தப்பு என்பதை கண்டிப்பாக உணர்கிறேன். என்ன மாதிரியான சூழலாக இருந்தாலும் அப்படி ரியாக் பண்ணி இருக்கக் கூடாது. வீடியோவை பார்த்த பிறகு நானே பீல் பண்ணினேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.