ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.  இதனால் இந்திய ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் WCல் இந்தியா தோல்வியடைந்ததால் தனது நெஞ்சு உடைந்து சிதறியதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது x தளத்தில், “WCல் தோற்றபிறகு அழுதுகொண்டே இருந்தேன்.

என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. அது கிரிக்கெட் தோல்விக்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.