நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கிக் கொண்டதாக பேசப்படும் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக சக பயணி மகா காந்தியும், அவர் தான் என்னை தாக்கினார் என்று விஜய் சேதுபதியும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், இருவரும் பரஸ்பரம் பேசி தீர்த்துக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி சமரச விவகாரம் குறித்து இருதரப்பும் மார்ச் 2 ஆம் தேதி வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக mediation-க்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.