திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனே சிறுமியை மீட்டு பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்த விசாரணையில், வீட்டில் கோபித்துக் கொண்டு வேலை தேடி சென்னைக்கு சென்ற சிறுமியை முகலிவாக்கத்தை சேர்ந்த விஷ்ணு (28) என்பவர் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் பலமுறை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பம் ஆகி உள்ளார். இது குறித்து அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தின் விசாரணைக்கு கீழ் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா விஷ்ணுவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிதை தண்டனை மற்றும் ரூபாய் 10000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.