தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் “அமரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்தப் படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதற்கிடையில் அமரன் படத்தில் சாய் பல்லவி ஒரு துண்டு சீட்டில் தனது செல்போன் என்னை எழுதி சிவகார்த்திகேயனிடம் வீசுவார்.

அந்த எண் படத்தின் ஒரு காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த எண்ணை ஒரிஜினலாக பயன்படுத்தும் பொறியியல் மாணவர் வாகீசன், இதற்காக பட நிறுவனத்திடம்  1.1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்திருப்பதாக கூறும் அவர், இந்த படம் வெளியானதிலிருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளால் தன்னால் தூங்கவும் முடியவில்லை, படிக்கவும் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.