கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் விமான நிலையத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 2 நைஜீரியா பெண்கள் போதை பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடத்திய தீவிர விசாரணையில், நைஜீரியாவை சேர்ந்த பம்பா பாண்டா (31), அபிகேல் அடோனிஸ்(30) என்ற இரு பெண்கள் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தங்களது ட்ராலி சூட் கேஸில் மெத்தலின் மெத்தப்பட்டமை போதைப் பொருள்களை கடத்த முயன்றுள்ளனர்.

இதுகுறித்து மங்களூர் ஆணையர் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இரண்டு நைஜீரியப் பெண்களிடமிருந்து நான்கு மொபைல் ஃபோன்கள், பாஸ்போர்ட்டுகள் மற்றும் 18,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் டெல்லியில் வசித்து இந்தியா முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஆண்டு இருவரும் விமானத்தின் மூலம் மும்பைக்கு 37 முறை பயணம் மேற்கொண்டும், பெங்களூருக்கு 22 முறை பயணங்கள் மேற்கொண்டு போதைப் பொருள்களை கடத்தியுள்ளனர்.

இதில் பம்பா பாண்டா கடந்த 2020 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளார். அடோனிஸ் என்ற பெண்மணி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தங்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போதைப் பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என காவல் ஆணையர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் குற்றவாளிகளை கைது  செய்ய முக்கியமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மங்களூரில் 15 கிராம் மெத்த பெட்டமைன்   போதை பொருள்  ஹைதர் அலி என்ற நபர் மூலம் கைப்பற்றப்பட்டதை தொடங்கி நடத்தப்பட்ட தீவிர விசாரணை நடவடிக்கையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு நைஜீரியா பெண்களை கண்டுபிடிக்க வழி வகுத்தது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.