
இந்த வருடத்திற்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தின் எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. சேலத்தில் இருக்கும் SCF மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்வது.
இதனால் முதலில் பேட்டிங்கில் களம் இறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து மதுரை அணிக்கு 212என்ற இலக்கை நிர்ணயித்தது. அதன் பிறகு மதுரை அணி களம் இறங்கிய நிலையில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணியிடம் தோல்வியுற்றது.