உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவின் செக்டர் 50 பகுதியில், ஒரு காரின் பக்கக் கண்ணாடியை (சைடு மிரர்) திருடிய திருடன் ஒருவர் சிசிடிவி கேமராவில் பிடிபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த திருட்டு குறித்து பதிவான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு காரில் வந்த திருடன், காரை நிறுத்திவிட்டு  ஒரு வீட்டின் முன் நின்றிருந்த மற்றொரு காரை நோக்கி நடக்கிறார்.

பின்னர் அக்காரின் சைடு மிரரை முறித்து உடைத்து எடுத்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய காரில் ஏறி, அங்கிருந்து தப்பிச் செல்கிறார். இந்த செயல்கள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மேலும் திருடனை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம்  பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும், சிசிடிவி கேமரா போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை எடுத்துக்காட்டுகிறது.