மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வாகனங்களின் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதோடு வளர்ச்சியடைந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனநிறுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இதனை சரி செய்வதற்காக மகாராஷ்டிரா அரசு ஒருங்கிணைந்த வாகன நிறுத்த கொள்கையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி நகராட்சி கமிஷனர்களுடன் போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான தேவையான சான்றிதழ் வேண்டும். அது இல்லையென்றால் புதிய கார்கள் பதிவு செய்யப்படாது என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து மாநிலத்தின் புதிய பார்க்கிங் கொள்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை நிறுத்துவதற்கான பிளாட்டுகளை விற்பனை செய்ய வேண்டும். அதில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கான சான்றிதழை அரசிடமிருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி சான்றிதழ் பெறவில்லை என்றால் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படாது என்று அறிவித்தார்.