தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த சங்கத்தேர்தல் வாக்குப்பதிவானது சென்னை அடையாறிலுள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் , நடிகர்கள் உட்பட பலரும் தங்களது வாக்கை பதிவுசெய்தனர்.

இந்த நிலையில் நலம் காக்கும் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்று உள்ளார். தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விடவும் 150 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்று உள்ளார். இதன் வாயிலாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதோடு  தயாரிப்பாளர் சங்க பொருளாளர் ஆக முரளி அணியை சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றிருக்கிறார்.