
குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்குரிய போட்டித் தேர்வு இன்று (ஜன,.29) நடைப்பெறயிருந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1,181 பணி இடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் 2,995 மையங்களில் தேர்வு துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வினாத்தாள் லீக்காகி சர்ச்சையை கிளப்பியது. இதனால் அந்த தேர்வு உடனே ரத்துசெய்யப்பட்டது.
இதுகுறித்து சந்தேகத்திற்குரிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாக தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது. மேலும் தேர்வர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேர்வு வாரியம் வருத்தம் தெரிவித்ததுடன், தேர்வு மையங்களுக்கு போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. இத்தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிப்படும். அம்மாநிலத்தில் கடந்த 12 வருடங்களில் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்துசெய்யப்பட்ட 15வது அரசுப் போட்டி தேர்வு இதுவாகும்.