
பள்ளி வேலை நேரத்தில் கணரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பள்ளி பகுதிகளில் கணரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் உட்பட கணரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் குறிப்பாக காலை 7 மணியிலிருந்து 12 மணி வரையிலும் அதேபோல மாலை நேரத்தில் 4 மணியிலிருந்து 8 மணி வரையிலும் குறிப்பாக பள்ளி அமைந்துள்ள பகுதிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கணரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விபத்தின் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை பெரம்பூரில் நேற்று 10 வயது சிறுமி தாய் கண் முன்னே பள்ளிக்கு செல்லும்போது தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் சென்னை மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொளியாக அந்த பகுதியின் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று போக்குவருத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அந்த பள்ளி மாணவி இறந்த சம்பவம் எதிரொளியாக தற்போது காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .