பிரான்சில் இன்னும் சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும் அவர்கள் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும் நிலையில் சமூக வலைதளம் மூலம் அவர்கள் கெட்டு சீரழிவது நன்றாக தெரிகிறது. இந்நிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்க கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயது உட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படும் என்று கூறினார்.