உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் செக்டர் 12 பகுதியில் உள்ள எம் பிளாக் மார்க்கெட்டில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி மாலை நேரத்தில் லலித் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஒரு கடை வீதியில் மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறிது நேரம் அவரை கவனித்து விட்டு பின்னர் பைக்கில் இருந்த ஒருவர் மட்டும் இறங்கி லலிதின் பின் இருந்து கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை  வேகமாக பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

உடனே லலித் அந்த மர்ம நபர்களை துரத்த முயன்றார். ஆனால் பைக் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவம் முழுவதும் கடையின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து லலித் செக்டார் 24 காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை தேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.