
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.
அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம் விழுந்த பகுதியில் பி.ஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில், அங்கு இருந்த பயிற்சி மருத்துவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விடுதியின் அருகே சீதாப்பென் என்ற பெண் டீக்கடை நடத்தி வந்துள்ளார். அவரது மகன் ஆகாஷ் படானி (14) டீக்கடை அருகே மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது வேகமாக வந்த விமானத்தின் உதிரி பாகங்கள் மோதி டீக்கடை எரிந்துள்ளது. அதில் சீதாபென் படுகாயம் அடைந்துள்ளார். விமானத்திலிருந்து உடைந்த தீப்பிடித்த பாகம் ஒன்று தூங்கிக் கொண்டிருந்த ஆகாஷ் மீது பலமாக தாக்கியது.
உடனே ஆகாஷ் மீது தீப்பரவி அவர் சம்பவயிடத்திலேயே எரிந்து கரிக்கட்டையாகியுள்ளார். தாயின் கண் முன்னே மகன் கருகிய நிலையில் காப்பாற்ற முடியாமல் தவித்த தாய் மருத்துவமனையில் கதறி அழுதது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.