
மதுரை மாவட்டத்தில் உள்ள தும்மகுண்டு பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவர் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராமையாவின் தந்தை பால் சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமையா தந்தையின் உடல் முன்பு கதறி அழுத போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ராமையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
பின்னர் தந்தை- மகன் இருவரது உடலையும் ஒரே இடத்தில் வைத்து இறுதிச் சடங்கை உறவினர்கள் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.