கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் சக்கட் பகுதியில் வசித்த ஹேம்ராஜ் மீனாவும் அடங்கும். இவருக்கு மதுபாலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையில் ஹேமராஜின் இறுதி சடங்கிற்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்றார்.

மேலும் ஒரு சகோதரனாக நான் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்று மதுபாலாவுக்கு உறுதியளித்தார். மதுபாலாவின் மகள் திருமணத்தை முன் நின்று நடத்துவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் மதுபாலாவின் மகள் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்கு முன் சபாநாயகர் உறுதி அளித்தபடி ஓம்பிர்லா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சகோதரன் நிலையில் இருந்து அவரது திருமணத்தையும் நடத்தி வைத்தார். இந்த சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.