
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கான் விமான நிலையத்தில் எதிர்பாராத சிக்கலால் 45 நிமிடங்கள் பயணத்தைத் தாமதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது முக்தைநகருக்கு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மும்பைக்குத் திரும்ப சென்ற போது, அவரது தனியார் விமானத்தின் விமானி திடீரென புறப்பட மறுத்தார்.
தனது பறக்கும் நேரம் முடிந்துவிட்டதாகவும், 12 மணி நேரமாக தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விமானி கூறியுள்ளார்.அந்தச் சூழ்நிலையை சமாளிக்க அமைச்சர்கள் கிரிஷ் மகாஜன் மற்றும் குலாப்ராவ் பாட்டீல் நேரில் சந்தித்து விமானியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் விமானி முடிவில் உறுதியாக இருந்தார்.
பின்னர் ஏக்நாத் ஷிண்டே தாமாகவே விமானியை சந்தித்து நேரடியாக பேசியுனார். அப்போது விமானி உடல்நலக் காரணங்களையும் முன்வைத்திருந்த நிலையில், அவரது விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தேவையான உறுதிப்படுத்தல்கள் கேட்கப்பட்டன.
இதனையடுத்து சுமார் 45 நிமிட நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு விமானி புறப்பட ஒப்புக்கொண்டார். அந்த இடையூறு முழுவதும் முடியும் வரையில் , விமான நிலையத்தில் இருந்தவர்கள் காத்திருப்பு அறையில் பதற்றத்துடன் இருந்தனர்.
அரசுத்தலைவரின் பயணம் திடீரென தடுக்கப்பட்டதையும், விமானியின் மனநிலையை சமாளித்து விமானப் பயணத்தை மீண்டும் தொடங்கச் செய்ததும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் முக்கிய நிகழ.