கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய உயர் கல்வி அமைச்சர் சுதாகர் கூறியதாவது, இது மிகவும் துரதிஷ்டவசமானது. இரண்டு தேர்வு மையத்திலும் இது போன்ற புகார்கள் வந்தது. இருப்பினும் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மையங்களில் தேர்வு சமூகமாக நடைபெற்றது. நாங்கள் அனைத்து மதங்களையும் அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். நாங்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.