
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். அந்த விவகாரங்களை அவர்களே முடிவு செய்வார்கள்.
இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் கூறினார். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி பெயரை கூறாமல் அதிமுக தலைமையின் கீழ் தாங்கள் போட்டியிடுவதால் அக்கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர் ஆவார்கள் என்று கூறினார்.
இதையடுத்து தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு என் நம்பிக்கை என்னவென்றால் அதிமுக மற்றும் பாஜக அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது என்று தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால் இன்னும் சில காலத்தில் அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.