
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி (29) -சோனம் (24) தம்பதியினர் மேகலயாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அப்போது ராஜா ரகுவன்சியை அவரது மனைவி சோனம் கூலிப்படையை வைத்து கொலை செய்து மலைப்பகுதியில் இருந்து ராஜா ரகுவன்சின் உடலை தூக்கி வீசி உள்ளனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சோனம் தன்னுடைய காதலர் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் சோனம் மற்றும் குஷ்வாஹா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில் கொலை எப்படி நடந்தது? என கூலிப்படையினரும், சோனமும் காவல்துறையினரிடம் நடித்துக் காட்டியுள்ளனர்.
அதற்காக 4 பேரையும் குற்றம் நடந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்த விசாரணைக்கு கள்ளக்காதலன் குஷ்வாஹா அழைத்து செல்லப்படவில்லை. அதில் கூலிப் படையில் ஒருவரான விஷால் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதன் பின்னர் கூலிப்படையை சேர்ந்த ஆனந்த் மற்றும் ஆகாஷ் ஆகிய மூவரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அச்சம்பவத்தின் போது சோனம் கணவரை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து சென்றுள்ளார்.
அப்போது 3 பேரையும் குஷ்வாஹா தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சோனம் சென்றுள்ளார். பின்னர் சோனம் தான் கணவரின் மொபைல் ஃபோனையும் முதலில் உடைத்துள்ளார்.
அவருடன் சேர்ந்து விஷாலும் மொபைல் போனை உடைத்துள்ளார். இதனையடுத்து சோனம் தலைமறைவாகிவிட்டார். பின்னர் காவல்துறையில் சரணடைந்த சோனம் முதலில் தன்னுடைய கணவரை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டதாக நாடகமாடியுள்ளார் .
அதன் பின் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதல் தொடர்பால் கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் வெளியே வந்துள்ளது. அச்சம்பவம் முழுவதையும் நடித்து காட்டுவது இந்த வழக்கை மேலும் வலுப்படுத்த உதவும் என சிறப்பு புலனாய்வு குழு நம்பிக்கை கூறியுள்ளது. மேலும் இவ்வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.