
மும்பைக்கு அடுத்துள்ள கல்யாணில் பகவான் மண்ட்லிக் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடை பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதன் பின்பு சில நாட்களுக்கு முன்பு பூனை ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் நாய் மற்றும் பூனை கடித்த பிறகு ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக டோம்பிவிலி மாநகராட்சி செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மாநகராட்சியின் மருத்துவ சுகாதார அதிகாரி கூறியதாவது, எந்த விலங்கு கடித்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொது மக்களை வலியுறுத்தினார். நாய், பூனை கடித்ததை தொடர்ந்து அவர் தடுப்பூசி போட்டிருந்தால் உயிரிழந்த இருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்.