
ஈரான் நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு குர்திஷ் இளம் பெண் ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் காவலில் வைக்கும் பொழுது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஹிஜாபை எரிவது, எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேபோன்று தற்போது ஈரானில் ஆடை எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் அவர் தனது ஆடைகளை களைந்து வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கல்லூரி வளாகத்தில் சர்ச்சையை கிளப்பியது. அந்தப் பெண்ணை பல்கலைக்கழகப் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஆமீர் மஜாப் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டதாவது, கலவரத்தில் ஈடுபட்ட இளம்பெண் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவரை சிறிது காலம் மருத்துவமனையில் காவல்துறையின் பாதுகாப்பில் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது எனக் கூறியுள்ளார்.
இச்சம்பம் குறித்து பலரும் அந்த இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல. ஏற்கனவே நடந்த ஆடை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் என கூறி வருகின்றனர். லெய் லா என்ற நபர் தனது இணைய பக்கத்தில், அந்த இளம் பெண் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மனநலம் பாதிப்பு என தவறாக கூறுகின்றனர். பொதுவாக பெண்கள் பொது வெளியில் இவ்வாறு நடந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் போராட்டம் குறித்து ஆம்னஸ்டி என்ற அமைப்பு கூறியதாவது, ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராகவே அந்த இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவரை காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர். அவருக்கு ஆதரவாக அவரது குடும்பமும், அரசு வழக்கறிஞர்களும் செயல்பட வேண்டும் என கூறினார்.