
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி. இவர் கடைசியாக ஹிட் 3 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நானி விருமாண்டி திரைப்படத்தில் அந்த கோர்ட் சீனின் போது அவர் தூங்கிக் கொண்டிருப்பார். அவரை தட்டி எழுப்புவார்கள் அப்பொழுது அவர் உண்மையில் தூங்கி எழுப்பவர் போல முகபாவனை செய்வார்.
Podhum sir. Podhum ♥️@ikamalhaasan
— Nani (@NameisNani) May 28, 2025
அந்த சீனை நான் 100 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன். அதை இன்ஸ்பயர் செய்துதான் ஹாய் நான்னா என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்தேன் என்று கூறியிருந்தார். தற்போது தக் லைப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் மற்ற நடிகர்கள் உங்களுடைய குறிப்பிட்ட காட்சியை பின்பற்றி நடித்த பேசும்போது எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் நானி சமீபத்தில் சொல்லியிருந்தார். நானி பெயரை ஏன் குறிப்பிட்டேன் என்றால் சினிமா என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நானி என்று குறிப்பிடுவது பெரியது. அது மாதிரி தான் நடிப்பும் இருக்க வேண்டும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார். இதற்கு நானி தனது எக்ஸ் பக்கத்தில் போதும் சார் போதும் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.