வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய வங்காளதேச அணி, இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் விடும் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் கூறுகையில், “பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அவர்கள் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வங்காளதேசம் நமக்கு நல்ல போட்டி கொடுத்தது. தற்போது அவர்கள் அணி மேலும் வலுவடைந்துள்ளது. எனவே இந்தியா கவனமாக விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திய அணி அடுத்த நான்கரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதற்கு இந்தியா குறைந்தது 5 வெற்றிகளை பெற வேண்டும். ஆனால் அந்த 5 வெற்றிகளும் எளிதாக இருக்காது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த கோடை காலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும் என சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.