இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. பிசிசிஐ இந்திய அணியை  (செப்டம்பர் 28) அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். இம்முறை, மூன்று புதுமுக வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாக உள்ளனர். அவர்களில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவதற்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதேபோல, ஹர்ஷித் ராணா மற்றும் 21 வயது ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரும் அறிமுகமாகும் வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தால் அணிக்கு வலுவாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் வலுவாக இருக்கின்றனர்.

இந்த டி20 தொடரில், இந்தியா புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களின் திறமையை உலகம் முழுவதும் காட்ட ஆர்வமாக உள்ளது. இது இந்திய அணி மிகப்பெரிய வெற்றிக்கான தளத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.