
சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம் வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனால் இன்று முதல் நாமக்கல் மாவட்டத்தில் உணவு டெலிவரி இல்லை என்று நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் சங்கத்தினர் அறிவித்தனர். இது குறித்து சென்னையில் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் சமூகத் தீர்வு எட்டாவிட்டால் சென்னையிலும் swiggy, zomato மூலம் உணவு வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.