தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காமாட்சி தெருவில் தியாகராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பாமா(34), ருக்மணி(34) என இரட்டை மகள்கள் உள்ளன. அந்த 2 பெண்களும் 34 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என வருத்தத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் ருக்மணி என்பவர் திங்கட்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்றொரு சகோதரியான பாமா சிகிச்சை பெற்று வருகிறார்.