
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்தியா அணி டாஸ் வென்றது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் ஆல் அவுட் ஆனது. பண்ட் 40 ரன்கள் அடித்தார். முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் இந்த ஆட்டத்தில் எல்லைக் கோட்டின் அருகே நின்று பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது இந்திய ரசிகர் ஒருவர் அவரது கையில் விராட் கோலியின் புகைப்படம் உள்ள பதாகையை ஏந்தி ஆரவாரம் செய்தார். இதனை பார்த்த கான்டாஸும் ரசிகருடன் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த போட்டியில் கான்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி மோதல் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரின் செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.