மண்ணச்சநல்லூர் அருகே 17 வயது சிறுவன் மற்றும் சிறுமி பழகி வந்த நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட தற்கொலைச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பைஞ்ஞீலி பகுதியைச் சேர்ந்த சிறுவன், மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இதனை அறிந்த சிறுமியின் தாய் தனது மகளை கண்டித்தார். இதனால் சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி, சிறுவனின் வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்தார்.

இந்தத் தொடர்பாக பிரச்சனைகள் நிலவிய நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.