சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜெயகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கொங்கணாபுரத்தில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி இருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சீனிவாசன் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சீனிவாசன் சங்ககிரி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தான்.

இதனால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.