பாலிவுட் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான அஜாஷ்கான் மீது மும்பை காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜாஷ்கான் தான் தொகுத்து வழங்கி வரும் “ஹவுஸ் அரெஸ்ட்” என்ற நிகழ்ச்சியில் ஒரு வேடத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண் ஒருவரை ஏமாற்றி தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மும்பை சர்கோப்  காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பெண் அளித்த புகாரில், அஜாஷ்கான் “ஹவுஸ் அரெஸ்ட்” நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி என்னை அழைத்தார்.

அந்த நிகழ்ச்சியின் படபிடிப்பின் போது முதலில் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியவர். அதன் பின் தன்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே “ஹவுஸ்அரஸ்ட்” நிகழ்ச்சியின் மீது ஆபாசமான உள்ளடக்கம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அஜாஷ்கான் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது புகார் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.