வனத்துறை அமைச்சராக பொன்முடி செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்தது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கு சிபிஐ அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது. அதில் அமைச்சர் பொன்முடி கன்புளியன்ஸ் நிறுவனம் அமல் நிர்வாக இயக்குனர் கௌதம சிகாமணி, கே.எம் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை அதன் நிர்வாக இயக்குனர் அசோக் சிகாமணி, கே.எஸ் மிணரல்ஸ் நிறுவனம் பி.ஆர்.எம் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குனர் கே.எஸ் ராஜா மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, பொன்முடி, கௌதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் வருகிற 19 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதோடு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.