
சசிகுமார் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சசிகுமார் நடிப்பில் நந்தன் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்த நந்தன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதன் பிரமோஷன் பணிகளில் சசிகுமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சசிகுமார் கூறியதாவது, ஈசன் படத்துக்கு பிறகு நான் தளபதி விஜயிடம் கதை ஒன்றை சொன்னேன்.
அது ஒரு வரலாறு சம்பந்தப்பட்ட கதை. விஜய்க்கும் அந்த கதை பிடித்து விட்டது. அவரே தயாரிப்பாளரையும் காட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அதன் பட்ஜெட், வி எஃப் எக்ஸ் எல்லாம் செலவு மிகுந்ததாக இருந்தது. அதனால் அந்த படத்தை எடுக்கவில்லை. விஜயின் 69 ஆவது படம் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. அந்த படத்துடன் விஜய் ஓய்வு பெற கூடாது என நினைக்கிறேன். அரசியலில் இருந்தும் அடிக்கடி படம் நடிக்கலாம். விஜய் சினிமாவில் ஓய்வு பெற மாட்டார் தான் நினைப்பதாக சசிகுமார் கூறியுள்ளார்.