
தென்னிந்திய நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பானா காத்தாடி மூலம் தமிழில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்ட நடிகை சமந்தா நடிப்பில் மட்டுமல்லாமல் பல தொழில்களையும் கவனித்து வருகிறார். இவர் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் நடிப்பு மற்றும் தொழிலில் மிகவும் பிசியாக வலம் வந்த இந்த நிலையில் தான் இவருக்கு மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதிலிருந்து சமீப காலமாக மீண்டு வெப் சீரிஸ் களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா குறித்து பேசி உள்ளார்.
இதில் அவர் கூறியதாவது,” சமந்தா ஒரு சிறப்பான நடிகை மட்டுமல்லாமல் மிகவும் நல்ல குணமுடைய ஒரு மனிதர் ஆவார். அவர் சமீப காலங்களாக நோயினால் மனதளவிலும், உடலளவிலும் பெரும் பாடுபட்டார். எப்பேர்பட்ட தடைகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் தைரியமாக அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக பயணித்து வருகிறார். அவர் தன்னுடைய கடின உழைப்பால் யாருக்கும் குறைந்தவர் இல்லை என்பதை தனது வெற்றியின் மூலம் எடுத்துக்காட்டி வருகிறார்”இவ்வாறு பாடகிச் சின்மயி நடிகை சமந்தாவை புகழ்ந்து பேசி உள்ளார்.