
புதுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. சரத்குமார் கடந்த 8 மாதமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீ கா அவரது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கு அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது குழந்தை தன்சிகா வாசற்படி அருகே உடலில் காயங்கள் எதுவும் இன்றி இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் மனவேதனையில் குழந்தை தன்ஷிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.