வின்னிபெக் நகரத்தை சேர்ந்த லாட்டரி ஆசாமி லாரன்ஸ் காம்பெல், தனது காதலி கிரிஸ்டல் மக்கேவை நம்பிக்கையுடன் ₹30 கோடி மதிப்புள்ள லாட்டரி பரிசுத் தொகையை வாங்க அனுப்பினார். ஆனால், அதே காதலி அந்த பணத்தை பெற்றவுடன் மற்றொரு காதலனுடன் ஓடி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

2024ஆம் ஆண்டு அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் வென்றது. ஆனால் தனக்கு செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் இல்லாததால், லாட்டரி அதிகாரிகளின் ஆலோசனையின்படி தனது காதலியை வெஸ்டர்ன் கனடா லாட்டரி கார்ப்ரேஷன்-ஐ தொடர்புகொண்டு பரிசை வாங்க அனுப்பினார். காதலியை நம்பிக்கையுடன் அனுப்பிய காம்பெல், பின் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

அந்தப் பரிசுத் தொகையை பெற்றவுடன் கிரிஸ்டல் மக்கே அவருடன் தொடர்பை துண்டித்து, ஹோட்டல் ரூமுக்கே வராமல் விட்டுவிட்டு, மற்றொரு ஆணுடன் இருப்பது தெரியவந்தது. மேலும், லாரன்ஸின் அழைப்புகளையும் மெசேஜ்களையும் வழிமறித்து, சமூக வலைதளங்களில் தடை விதித்து, அவ்வாறே பாதுகாப்பு உத்தரவும் பெற்றுள்ளதாக அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் லாரன்ஸ் காம்பெல், கிரிஸ்டல் மக்கேவுக்கு எதிராகவும், வெஸ்டர்ன் கனடா லாட்டரி கார்ப்ரேஷன் மற்றும் மானிட்டோபா லிகர் லாட்டரிகள் நிறுவனத்துக்கும் எதிராகவும் மனு தாக்கல் செய்துள்ளார். “நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியதோடு, அரசின் உரிமையுள்ள லாட்டரி நிறுவனம் என்னை தவறாக வழிகாட்டியுள்ளது” என்றும் அவர் வாதம் செய்கிறார்.