இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி லீட்சில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதனால் பயிற்சியாளர் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி.திலீப் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசியை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அவரது பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இருப்பினும் அவரது ஒப்பந்த காலத்தை பிசிசிஐ நீடிக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா பிசிசிஐ மற்றும் கௌதம் கம்பீர் இருவரும் டி.திலீப்பை பீல்டிங் பயிற்சியாளராக தக்கவைக்க பரிந்துரைத்துள்ளனர்.

அவரின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ திலீப்பின் ஒப்பந்த காலத்தை ஒரு வருடம் நீடித்துள்ளது. அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் திலீப்பின் பதவிக்காலம் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும்  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.