இனிமேல் நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம் செலுத்தவேண்டி இருக்கும். அந்த வகையில் ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதாவது, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை அனைத்திலும் பொருந்தும். ரயில்வே உணவு மெனுவில் மேலும் பல்வேறு விஷயங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் IRCTC தெரிவித்து உள்ளது. இதனால் தான் ரயில் உணவின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரம் ரயிலின் பேண்ட்ரி காரில் காணப்படும் சாதாரண உணவுகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என IRCTC தெரிவித்து உள்ளது

# ரொட்டி 3 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்வு.

#  சாண்ட்விச் ரூ.15 -ரூ.25 வரை உயர்வு.

# மசாலா தோசை 40 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்வு.

# பிரட்பக்கோடா 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்வு.

# ஆலுபோண்டா 7 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்வு.