
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசின் மகள் திருமணத்திற்கு நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து கலந்து கொண்டனர். இது சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவி ஆதங்கம் தெரிவிக்கும் வாழ்க்கையில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து பாடகி கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகனை அறிவித்தார். மேலும் தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன் வைத்தார்.
இதற்கு அவர் மாமியார், இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவரது மாமியாரும் பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்திருந்தார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், பாடகி கெனிஷா மீதும் சில குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாடகி கெனிஷா சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் எல்லா இரைச்சலுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது நான் அதிலிருந்து மீண்டு வந்து விடுவேன் நான் இசையை பற்றிக்கொள்ள விரும்புகிறேன் தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன் நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களில் இருந்து என் ஆன்மா பாடுகிறது என்று கூறியுள்ளார்.