ரத்தன் டாடா, இந்திய தொழில் உலகின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்டவர். அவருடைய தொழில்முனைவு மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையும் பலருக்கும் கவனத்தை ஈர்க்கும். அவருக்கு  ஏற்பட்ட காதல் தோல்வியும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் அவரது வாழ்க்கையின் முக்கிய அத்தியாயமாகும்.

இளமையில், ரத்தன் டாடா தனது தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். அங்கேயே தனது முதல் காதலைச் சந்தித்தார். அந்தக் காதல் அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனால், திடீரெனவே விதி அவர்களுக்கு வேறொரு பாதையை காட்டியது.

அவருடைய பாட்டியின் உடல்நிலை மோசமானதால், ரத்தன் டாடா இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஆழ்ந்தார். தனது காதலியும் தன்னுடன் இந்தியா வருவார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. ஆனால், இந்தியா-சீனா போர் வெடித்து, அரசியல் சூழ்நிலை அவ்வப்போது மோசமாக இருந்ததால், அவரது காதலியின் பெற்றோர் அவரை இந்தியா அனுப்ப மறுத்துவிட்டனர்.

இந்த நேரத்தில் ஏற்பட்ட காதல் முறிவு, ரத்தன் டாடாவின் வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் காதலை இழந்தது. அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அவர் அந்த இழப்பால் துவண்டுவிடாமல், தனது முழு கவனத்தையும் தொழில்முனைவில் செலுத்தினார். காதலில் ஏற்பட்ட தோல்வியைத் தாண்டி, தொழிலில் மாபெரும் வெற்றியடைய அவர் தனது மனதில் தீர்மானித்தார்.

ரத்தன் டாடாவின் குடும்பத்தினர் பலமுறை அவரை திருமணம் செய்வதற்கு வற்புறுத்தினார்கள். அதற்கு 4 முறை முடிவும் எடுக்கப்பட்டது. ஆனாலும், அவர் ஒருபோதும் திருமணம் செய்ய விருப்பம் காட்டவில்லை. தனது தனிப்பட்ட இழப்பையும் மனமுடைந்த துயரத்தையும் எதிர்கொண்டு, தொழிலில் முன்னேறினார்.

இன்று வரை, ரத்தன் டாடா தனது முதல் காதலை நினைத்துக்கொண்டு வாழ்கிறார். அவர் தனிமையான வாழ்க்கை பெரிதும் சோதனையாய் இருக்கும் என்றும், தனிமையின் கொடுமையைப் பலமுறை கூறியுள்ளார். இது அவருக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி தனது தொழில்முனையை வளர்த்துக்கொண்டது பெரும் சாதனை.

ரத்தன் டாடாவின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த, மனவலிமையுடன் செயல்படுவதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆக விளங்குகிறது.