இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். அதாவது, அவருக்கு இலேசான பாதிப்புகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டில் இருந்தே பணிகளை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வருவதாகவும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.