சின்னத்திரை பிரபலங்களில் பல பேர் தங்களுடன் நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் சிலர் சந்தோஷமாக திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனினும் ஒருசில பிரபலங்களுக்கு காதல் திருமணம் கடைசி வரையிலும் வருவது இல்லை. அப்படிதான் ரச்சிதா மற்றும் தினேஷ் திருமணம் வாழ்க்கை குறித்து ஒரு தகவல் வந்திருக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா தன் கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார் என சொல்லப்பட்டது. அதே நேரம் தினேஷ் ஒரு பேட்டியில் இப்போது இருவருக்கும் ஒரு பிரச்சனை என்பதால் தனியாக இருக்கிறோம் என்றார். தற்போது இருவருக்கும் விரிசல் அதிகம் ஏற்பட்டு தினேஷ் விவாகரத்து பத்திரம் தயார் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இத்தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.